business

img

மோசடி நிறுவனங்களில் அதானி ரூ.51,360 கோடி முதலீடு.... அமலாக்கத்துறை சோதனையில் வெளிவந்த உண்மை...

மும்பை:
பணமோசடிப் புகார்களுக்கு உள்ளான மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த4 நிறுவனங்களில் ரூ. 51 ஆயிரத்து360 கோடி அளவிற்கு அதானி முதலீடு செய்திருப்பது, அமலாக்கத் துறை சோதனை மூலம் வெளிச்சத் திற்கு வந்துள்ளது.

எலாரா இந்தியா ஆப்பர்ச்யூனிட்டீஸ் பண்ட் (Elara India Opportunities Fund), கிரெஸ்டா பண்ட் (Cresta Fund), அல்புலா இண்வெஸ்ட்மெண்ட் பண்ட் (Albula Investment Fund), ஏபிஎம்எஸ் இண்வெஸ்ட்மெண்ட் பண்ட் (APMS Investment Fund) ஆகியவை மொரீஷியஸ் நாட்டில் இயங்கி வரும் நிறுவனங்கள் ஆகும். இவற்றில் 2 நிறுவனங்கள் பணமோசடி புகார்களிலும் 1 நிறுவனம் வங்கிக் கடன் மோசடியிலும் சிக்கியிருப்பவை ஆகும். மற்றொரு நிறுவனம் எத்தியோப்பிய அரசால் தடைசெய்யப்பட்டது ஆகும். 
இந்நிலையில், இந்த 4 நிறுவனங்களின் மொத்த முதலீடுகளில் 90 சதவிகிதம், இந்தியாவின் பெரும்பணக் காரரான அதானியின் முதலீடுகள் என்பதும், இந்த நிறுவனங்களில் மொத்தம் 51 ஆயிரத்து 360 கோடி ரூபாய் அளவிற்கு அதானி முதலீடு என்பதும் தெரியவந்துள்ளது. உலக முதலீடுகளை ஈர்க்கும் விதமாக வியக்கவைக்கும் வரிச்சலுகை,முதலீட்டாளர்களின் அடையாளங் களை மறைக்கும் வசதிகள் எனமொரீஷியஸ் சட்டத் திட்டங்கள் அமைந்து இருப்பது அதானியின் முதலீடுகளுக்கு சாதகமாக அமைந்து இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை, செபிஅமைப்புகள் அதானி நிறுவனங்களில் சோதனை நடத்திய நிலையில், இந்த புதிய உண்மைகள் அம்பலமாகி இருக்கின்றன.

;